Co-operative Bank's In TamilNadu -கூட்டுறவு வங்கிகளின் சிறப்புகள்.

கூட்டுறவு வங்கிகள் மிகவும் பழமையான மற்றும் தனித்துவமான வங்கிகள் ஆகும். இந்தியாவில் 60% தொழிலாளர்கள் விவசாயத்தையே முதன்மை தொழிலாக கொண்டுள்ளனர். விவசாயிகளுக்கு முக்கிய கடன் மற்றும் மானியம் வழங்குனராக கூட்டுறவு வங்கிகளே உள்ளது.

தமிழ்நாட்டில் கூட்டுறவு
              
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாட்டில் தான் கூட்டுறவு வங்கிகள் சிறப்பாக செயல்படுன்றன. பல வகையான கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் இருந்தாலும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளான்மை கூட்டுறவு சங்கங்களே விவசாயிகளிடமும் மக்களிடமும் நேரடி தொடர்பில் உள்ளன.

தொடக்க வேளான்மை கூட்டுறவு சங்கங்கள் தான் விவசாயிகளுக்கு நேரடி கடன் வழங்குநராக செயல்படுகின்றன. விவசாய கடன்களான பயிர்க்கடன் நகைக்கடன் உரக்கடன் மற்றும் இடுபொருட்கடன்களை இத்தகைய சங்கங்களே வழங்குகின்றன. இச்சங்கங்களுக்கு தேவையான மூலதன உதவிகளை தமிழ்நாடு அரசு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்குகிறது.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் நேரடி மக்கள் தொடர்புடைய வங்கிகள் ஆகும். இவை நம் நாட்டில் இருக்கும் தேசிய மயமாக்கபட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளை விட சிறப்பான திட்டங்களை கொண்டிருந்தாளும் மக்களுக்கு இத்தகைய வங்கிகள் இருப்பதே தெரிவதில்லை. 
இவ்வங்கியின் சிறப்பம்சங்கள் ஆனது இதன் சேமிப்பு கணக்கில் இருந்தே தொடங்குகிறது. 
    
 தேசிய மயமாக்கபட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளை விட  சேமிப்பு கணக்கிற்கான வட்டி இதில் அதிகமாகும். 2023ம் ஆண்டில்  Sbi போன்ற பிற வங்கிகள் சேமிப்பு கணக்கிற்கு 2.5% வட்டியே வழங்குகின்றன. ஆனால் கூட்டுறவு வங்கிகள் 4% வட்டி வழங்குகின்றன. 

Fixed deposit போன்றவற்றிற்கு 5.75% முதல் 6% வரை வழங்குகின்றன. கூட்டுறவு வங்கிகள் 8% வரை வட்டி வழங்குகின்றன.

 மற்ற வங்கி சேமிப்பு  }
 கணக்கு வட்டி               }      2.5%

கூட்டுறவு வங்கி சேமிப்பு }
கணக்கிற்கான வட்டி         }   4%

கட்டணங்கள் 
மற்ற தனியார் வங்கி சேமிப்பு  } குறைந்தது கணக்கு கட்டணம்  }  5000ரூ

கூட்டுறவு வங்கி சேமிப்பு} குறைந்தது
கணக்கு கட்டணம்    }    1000ரூ

கடன் திட்டங்கள்
     
  இந்தியாவில் தனிவட்டி முறையில் கடன் வழங்கும் ஒரே வங்கிகள் கூட்டுறவு வங்கிகளாகும். 
* வீட்டுக்கடன் 
* நகைக்கடன் 
* அடமான கடன் 
* தனிநபர்கடன் 
* சுய உதவி குழு போன்ற கடன்தளை வழங்குகின்றது. 

உதாரணமாக நீங்கள் 20இலட்சத்தில் வீட்டுக்கடன் வாங்கினீர்கள் எனில் தனிவட்டி மற்றும் கூட்டு வட்டிக்கானா வித்தியாசம் மிகப்பெரிய அளவில் இருக்கும். வீட்டுக் கடன் வாங்கினால் கிடைக்கும் வரிச்சலுகைகள்  | Tax Benefits Available On A Home Loan.

தனிவட்டி என்றால் கடனின் அசல் தொகை குறையும் போது வட்டியும் குறையும்.



மேலே உள்ள படத்தில் interest என்னும் கட்டத்தில் வட்டி தொகையானது குறைந்து கொண்டே வருவதை காணலாம். இது தான் தனிவட்டி மற்றும் தனிவட்டி வழங்கும் வங்கிகளின் சிறப்பாகும்.

கூட்டு வட்டி என்றால் அசல் தொகை குறைந்தாலும் வட்டியானது குறையாது.


             

கூட்டு வட்டியானது கடன் தவனை காலம் முழுவதும் மழு தவணைக்கும் ஒரே வட்டியினை கொண்டதாகும்.

மாநிலத்தின் முன்னேற்றம்
                     
 தேசிய மயமாக்கபட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருந்தாலும் கடன் வாங்கி இருந்தாலும் அது நமக்கு செலவை தருமே தவிர லாபத்தை தராது. ஆனால் கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு வைத்திருந்தாலும் கடன் வாங்கியிருந்தாலும் அதன் லாபம் நம் மாநிலம் மற்றும் விவசாயிகளுக்கே சேரும்.

கூட்டுறவு வங்கி பிரட்சனைகள்
                     
  இவ்வங்கிகளில்  சட்டங்கள் மிக அதிகம் மற்றும் கடனுக்கு தேவையான சான்றுகள் அதிகம் ஆகும். இதன் காரணமாகவே  நேர விரயம் அதிகமாகும். கூட்டுறவு வங்கிகளில் #Internet banking மற்றும் ATM போன்ற சேவைகள் வெற்றிகரமானதாக இல்லை. 2019ல் தான் #Mobile banking சேவை அறிமுகபடுத்தப்பட்டு வெற்றிகரமானதாக செயல்படுத்த படுகின்றது.

இன்றைய நிலை
                     
கூட்டுறவு வங்கிகளை 50 வயதிற்கு மேற்ப்பட்டவர்களே பயன்படுத்துகின்றனர். இன்றய இளம் தலைமுறையினர் இந்த வங்கிகளின் சிறப்பை உணர்வதில்லை . விவசாயி இருக்கும் வரை இந்த கூட்டுறவு வங்கிகள் இருந்தாலும் விவசாயிகளுக்கு பயன்படும்டி இருக்க வேண்டுமானால் இவ்வகை வங்கிகள் இலாபத்தில் செயல்பட வேண்டும். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எண்ணாமல் நாமும் கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கை தொடங்கி பயன்படுத்தினால் போதும் இந்த கூட்டுறவு வங்கிகள் நல்ல நிலையில் செயல்படும்.